கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்
1/27/2021 3:28:39 AM
ஈரோடு, ஜன.27 கோழிக்களுக்கான வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. சிறிய குஞ்சுகள் முதல் பெரியகோழிகள் வரை அனைத்து கோழி இனங்களையும் பாதிக்கும் முக்கியமான நச்சுயிர் தொற்று நோயான வெள்ளைக்கழிச்சல் எனப்படும் ராணிக்கட் நோய் வெயில் காலங்களில் அதிக அளவில் பரவி கோழிகளில் இறப்பு ஏற்படுத்தக்கூடியதாகும். இந்நோய் தாக்கிய கோழிகள் வெள்ளையாக கழியும், குறுகிக்கொண்டு தீவனம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருக்கும், நரம்பு பாதிக்கப்பட்ட கோழிகள் கால்களை இழுத்து கொண்டும், கழுத்தை திருகி கொண்டும் இருக்கும். இந்நோய் பரவியபின் சிகிச்சை அளித்து குணப்படுத்துவது கடினம்.
எனவே, கால்நடைத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி முகாமானது வரும் பிப்.1ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கோழிகளை வளா்க்கும் அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் இத்தடுப்பூசி முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
மாநகரில் இன்று மின்தடை
மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தும் இடங்கள் அதிகரிப்பு
8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
கூடுதல் வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதி இல்லை
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்