போரூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர் கைது
1/26/2021 5:34:29 AM
சென்னை: தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூர் அருகே சுங்கச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் கார் மற்றும் ஆட்டோவில் வந்த 8 பேர், உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சுங்கச்சாவடியை சூறையாடினர். போலீசார் விசாரணையில், கடந்த 19ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி பாபு, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதால், அவரிடமிருந்து ரூ.4,500 ஐ ஊழியர்கள் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாபு, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது தெரிந்தது. இதுதொடர்பாக, பாபு (31) அஜித் (23), கந்தன் (40), விமல்ராஜ் (24), ரமேஷ் (39), சரவணன் (40) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்
மாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்
சுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்
திருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்
மினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்