திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகள்: சீரமைக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் மனு
1/25/2021 2:01:32 AM
ஆவடி: புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான முல்லை கே.பலராமன், ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவடி மாநகராட்சி 8வது வார்டில் திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் உள்ளது. இந்த நகர் 1964ல் குடியிருப்பு மனைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த நகரில் ஒரு சில சாலைகளே போடப்பட்டது. மேலும் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.
குறிப்பாக சரஸ்வதி நகர் முதல் தெரு, 2வது, 3வது மற்றும் 4வது தெருவில் கிழக்கு பகுதி மேற்கு பகுதி, 5வது தெருவில் கிழக்கு பகுதி மேற்கு பகுதி, 6வது தெருவில் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி, மேலும் விரிவாக்கத்தில் உள்ள முதல் தெரு, 2வது குறுக்குத்தெரு, காந்தி தெரு, எம்.ஜி.ஆர். மேற்கு பகுதி தெரு, அண்ணா தெரு, காந்தி தெரு மேற்கு பகுதி 12வது தெரு மற்றும் பியூலா தெருக்கள் ஆகிய தெருக்கள் 56 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலைகளாகவே உள்ளது.
இந்த தெருக்களில் சிறு மழை பெய்தால் கூட சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டே சென்று வருகின்றனர். மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் வந்து செல்ல முடியவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் வந்து 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் இன்று வரை சாலைகள் அமைக்கவில்லை. எனவே திருமுல்லைவாயல் சரஸ்வதி நகருக்கு உட்பட்ட பகுதிகளில் சீரமைக்காத சலைகளை மழைநீர் கால்வாயுடன் சிமெண்ட் மற்றும் சாலை அமைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாமதமாக பணிக்கு வரும் இ சேவை மைய ஊழியர்கள்: பொதுமக்கள் புகார்
ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி அக்கா - தம்பி சாவு
பூந்தமல்லி அருகே பரபரப்பு ‘விடிஞ்சா கல்யாணம்’ வரவேற்புக்கு முன் அழகு நிலையம் சென்ற மணமகள் ‘எஸ்கேப்’: திருமண மண்டபத்தை சூறையாடிய மாப்பிள்ளை வீட்டார்
ரவுடி படுகொலையில் ஒருவர் கைது தலைமறைவான 8 பேருக்கு வலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழி
கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
வாகன விபத்தில் தந்தை, மகன் பலி: தாய் படுகாயம்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்