திருவள்ளூர் ஆர்டிஓ அலுவலகத்தில் உருக்குலைந்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
1/25/2021 2:01:26 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு வழக்கு சம்பந்தமாக லாரிகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் அலுவலகத்தை சுற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த பறிமுதல் வாகனங்கள் அனைத்தும் முறைப்படி ஆண்டுதோறும் ஏலம் விடப்பட வேண்டும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஏலம் விடப்படாததால் பறிமுதல் வாகனங்கள் அனைத்தும் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் உருக்குலைந்து கிடக்கின்றன. இந்த பறிமுதல் வாகனங்களை அருகில் உள்ள மைதானத்தில் நிறுத்தி உள்ளதால், அலுவலகம் வருபவர்கள் தவிக்கின்றனர். இவ்வாறு வாகனங்களை மறைக்கும் அளவு செடி, கொடிகள் வளர்ந்து, புதராக உள்ளதால், அப்பகுதியில் பாம்புகளின் தொல்லை அதிகரித்து உள்ளது. எனவே, பறிமுதல் வாகனங்களை ஏலம் விட்டு, அதன் வருவாயை அரசு கணக்கில் சேர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாமதமாக பணிக்கு வரும் இ சேவை மைய ஊழியர்கள்: பொதுமக்கள் புகார்
ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி அக்கா - தம்பி சாவு
பூந்தமல்லி அருகே பரபரப்பு ‘விடிஞ்சா கல்யாணம்’ வரவேற்புக்கு முன் அழகு நிலையம் சென்ற மணமகள் ‘எஸ்கேப்’: திருமண மண்டபத்தை சூறையாடிய மாப்பிள்ளை வீட்டார்
ரவுடி படுகொலையில் ஒருவர் கைது தலைமறைவான 8 பேருக்கு வலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழி
கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
வாகன விபத்தில் தந்தை, மகன் பலி: தாய் படுகாயம்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்