காவல் நிலையத்தில் டிஎஸ்பி விசாரணை சேத்துப்பட்டு மக்கள் மகிழ்ச்சி கடத்தல் மணலை போலீஸ் விற்ற புகார்
1/24/2021 8:43:40 AM
பெரணமல்லூர், ஜன.24: வருவாய்த்துறை ஒப்படைக்கும் மணலை விற்று காசாக்கியது தொடர்பாக, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் நேற்று டிஎஸ்பி அறிவழகன் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி கிராமம் வழியே செய்யாற்று படுக்கை செல்கிறது. இந்த ஆற்றுப்படுக்கை மணல் கடத்தும் கும்பலால் நாள்தோறும் சிதைக்கப்பட்டு வந்தது. இந்த கும்பல் சேத்துப்பட்டு போலீசாருக்கு உரிய கட்டிங்கை கொடுத்து மணலை கடத்தி வந்தது. இதையறிந்தும் பொதுமக்கள் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். மேலும், அவ்வப்போது பொதுமக்கள் கூறும் தகவலின்பேரில் வருவாய்த்துறையினர் ரோந்து சென்று மணலுடன் மாட்டுவண்டி, டிராக்டர், லாரி போன்ற மணல் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து வந்தனர். ஆனால், வருவாய்துறையினர் பறிமுதல் செய்த மணலை போலீசார் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் விரிவான செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து, மணல் விற்றதில் தொடர்புடையதாக கூறப்படும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை, எஸ்பி விசாரணைக்கு அழைத்த நிலையில், போளூர் டிஎஸ்பி அறிவழகன் நேற்று மாலை சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று போலீசாரிடம் கிடுக்குப்பிடி போட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த வாகனங்களில் கடத்தல் மணல் இல்லாமல், வாகனங்கள் மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
டிஎஸ்பி அளிக்கும் விசாரணை முடிவை பொறுத்து, மாவட்ட காவல் துறை மணல் கடத்தலில் காசு பார்த்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிய வருகிறது. இதனால் சேத்துப்பட்டு பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
செங்கத்தில் ஏரிக்கால்வாய்களை தூர்வார கோரிக்கை குப்பநத்தம் அணை திறந்தும் தண்ணீரின்றி வறண்ட ஏரிகள் (தி.மலை) பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ₹13.83 லட்சம் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பறிமுதல்
தண்டராம்பட்டு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
மொபட் திருடிய 2 சிறுவர்கள் கைது
பொதுமக்களை தாக்கிய சைக்கோ வாலிபர் செங்கத்தில் பரபரப்பு கற்கள், விறகு கட்டையால்
5 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்; கணவன் கைது செய்யாறு அருகே பரபரப்பு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்