10 மையங்களில் இன்று தேசிய திறனாய்வு தேர்வு
1/24/2021 4:54:54 AM
திருப்பூர், ஜன.24: கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தேர்வு இன்று (24ம் தேதி) நடக்கிறது. திருப்பூர் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 942 மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். ஹால்டிக்கெட் கடந்த 18ம் தேதி வினியோகிக்கப்பட்டுள்ளது. அவிநாசி ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, மூலனுார் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் என்.சி.பி., நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் பெண்கள் பள்ளி, உடுமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் உள்ளிட்ட 10 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
உடுமலை ஒன்பதாறு செக்போஸ்டில் பறக்கும் படையினர் வாகன சோதனை
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
முதியவர் தூக்கிட்டு தற்கொலை
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்
பைக்கில் வந்து செல்போன் பறித்த வாலிபர் கைது
திருட்டு, வழிப்பறியை தடுக்க தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்