அடிக்கல் நாட்டு விழா
1/24/2021 4:15:39 AM
ஆர்.எஸ்.மங்கலம், ஜன.24: ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த திருஇருதய ஆண்டவர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தின் கட்டிடம் சேதமடைந்ததை தொடர்ந்து அகற்றப்பட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு திருத்தலத்தின் வளாகத்தில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பங்கு பாதிரியார் ஜெமாலை சுரேஸ் தலைமையில், திருப்பலி நடைபெற்றது. திருப்பலி நிறைவேற்றப்பட்ட பின்பு புதிய திருத்தலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பாதிரியார்கள் அமல்ராஜ், சகாயராஜ், கிருஸ்டோபர், லுார்து, சவரிமுத்து, பர்னபாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
தேர்தல் வர இருப்பதால் கோவில் விழாக்களுக்கு கட்சியினர் நன்கொடை
கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கம்
37 வருடமாக சென்று வந்த அரசு பஸ் 3 மாதமாக நிறுத்தம் 10 கிராமமக்கள் கடும் அவதி
பணம் திருட இடையூறாக இருந்த தாய்,மகனுக்கு கத்திக்குத்து
வங்கியில் ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் போடுவது எடுப்பது கண்காணிப்பு
பேக்கரிக்குள் புகுந்த டிராக்டர்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்