விவசாயிகளுக்கு ஆதரவாக
1/24/2021 4:08:09 AM
திருச்சி, ஜன.24: புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு எதிராக புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்த மோடி அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் 1.50 கோடி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருச்சியில் ரயில் மறியல் முயற்சி, முற்றுகை போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப ெபற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்பிஎப் மாவட்ட செயலாளர் ஜோசப்நெல்சன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொழிற்சங்கம், சிஐடியூ, கம்யூனிஸ்ட் உள்பட தொழிற்சங்கத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
துவரங்குறிச்சி அருகே கார் மோதி பெண் பலி
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா துவக்கம்
பூக்கள் சாற்றி பக்தர்கள் வழிபாடு புதிய லாரி புக்கிங் சென்டர் திறப்புக்கு சிஐடியூ எதிர்ப்பு
2,000 தொழிலாளர்கள் இன்று குடும்பத்துடன் போராட முடிவு நண்பர் வீட்டுக்கு க.காதலியுடன் சென்றவர் மயங்கி விழுந்து திடீர் சாவு
சோளத்தட்டை, வைக்கோல் போர் எரிந்து நாசம்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநில மாநாட்டில் தீர்மானம்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்