மீன்களை வேட்டையாட காத்திருந்த நீர்காகங்கள் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் 29ம் தேதி நடக்கிறது
1/24/2021 3:53:04 AM
கரூர், ஜன. 24: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக ஜனவரி 29ம்தேதி காலை 11மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிக்ள மற்றும் விவசாய சங்க பிரநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கலாம்.விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது மாவட்ட கலெக்டர் தலைமையிலான அலுவலர்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு
எஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா
குளித்தலை அருகே பெண் தற்கொலை
குளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
கரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்
அரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்