பழையபாளையம் ஏரியில் இரை தேடி குவிந்த கொக்கு, நாரைகள்
1/24/2021 3:48:51 AM
சேந்தமங்கலம், ஜன.24: பழைய பாளையம் ஏரியில், இரை தேடி ஏராளமான கொக்குகள் குவிந்துள்ளன. கொல்லிமலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திக்குளம் சென்னகுணம், பொம்மை சமுத்திரம் ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறி அக்கியம்பட்டி வழியாக பழைய பாளையம் ஏரிக்கு செல்கிறது. இதனால் ஏரியில் உள்ள சிறு குழிகளில், தண்ணீர் தேங்கி வருகிறது. தண்ணீரில் அடித்து வரப்பட்ட பூச்சிகள், சிறிய மீன், புழுக்களை உண்பதற்காக ஏராளமான கொக்குகள், நாரைகள் குவிந்துள்ளன. இவை அங்குள்ள செடி, கொடி மரங்களின் அமர்ந்திருப்பதை பார்த்தால், பறவைகள் சரணாலயம் போல காட்சியளிக்கிறது. இதனை காண அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
திருச்செங்கோட்டில் ₹15 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை
வெப்பம் அதிகரிப்பால் கோழிகளில் தீவன எடுப்பு குறையும்
கால்நடை மருத்துவ கல்லூரி ஆண்டு விழா
திருச்செங்கோட்டில் வருமான வரித்துறை சார்பில் கருத்தரங்கு
புதுச்சத்திரம் சம்பவத்தில் திடீர் திருப்பம் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி போலீஸ் இன்பார்மர் கொலையா?
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்