மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
1/24/2021 3:44:42 AM
தர்மபுரி, ஜன.24: தர்மபுரி மின்வாரிய வட்டத்திற்குட்பட்ட பிரிவு மின் அலுவலகங்களில், 22 ஒப்பந்ததாரர்கள் மூலம் 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் புதிய விதிமுறைகளை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தர்மபுரி மின் பகிர்மான வட்ட மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் 22 பேர் தர்மபுரி மேற்பார்வை பொறியாளர், சென்னை தலைமை பொறியாளர், மின்வாரிய தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில், பிஎப், பிஎஸ்ஐ, ஜிஎஸ்டி போன்ற விதிகளை கடைபிடித்து பணி செய்கிறோம். தற்போது, புதிய விதிமுறைகளை அதிகாரிகள் புகுத்தியுள்ளனர். தொழிலாளர் உரிமம் பெற வேண்டும் என்ற விதிமுறைகளை, அதிகாரிகள் அமல்படுத்தியுள்ளனர். இதனை எங்களால் ஏற்க முடியாது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வரை செய்யப்பட்ட பணிகளுக்கான பில் தொகையை பழைய முறையில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
5 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் 12,810 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் முதல்கட்டமாக 15 போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘பாடி கேமரா’ வழங்கல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி கட்சிக் கூட்டங்கள் வீடியோவில் பதிவு
கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் பெண் விவசாயி திடீர் தர்ணா
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்