விவசாய தொழிலாளர் சங்க நிர்வாக குழு கூட்டம்
1/24/2021 3:44:18 AM
தர்மபுரி, ஜன.24: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரதாபன் பேசினார். கூட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் கீழ், ₹770 கோடியில் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் வீடு, வீட்டு மனை இல்லாத நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் பல ஆயிரம் ஏழை மக்கள் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். எனவே, விண்ணப்பித்த அனைவரையும் பயனாளிகளாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராஜகோபால், ராஜூ, பச்சாகவுண்டர், கிருஷ்ணன், ராமச்சந்திரன், வத்தல்மலை ரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சிப்காட் அமையும் இடத்தில் டிரோன் கேமரா மூலம் சர்வே
அகரம் பிரிவு சாலையில் பேரிகார்டுகள் அமைப்பு
பாலக்கோடு அருகே கோமாரி நோய் மூலிகை மருந்து குறித்து விளக்கம்
115 பேருக்கு கொரோனா
திண்டல் ஊராட்சியில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் தர்மபுரி, ஏப்.19: கொரோ
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!