திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு சொத்து பிரச்னைக்கு தீர்வு கேட்டு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபர் போலீசில் சோதனையில் சிக்கினார்
1/22/2021 12:52:15 AM
திருவண்ணாமலை, ஜன.22: சொத்து பிரச்னைக்கு தீர்வு காண கோரி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தவர்களிடம் இருந்து பெட்ரோல் கேனை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை அடுத்த கலர்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(34). இவர் நேற்று தன்னுடைய 2 சகோதரிகளுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பாலாஜி கொண்டு வந்த ைபயை சோதித்தனர். அதில், பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் நிரப்பி கொண்டுவந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பவித்திரம் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை, உறவினர்கள் அபகரிப்பதாகவும், இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயற்சித்து, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முயற்சித்ததாகவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அவர்களை எச்சரித்த போலீசார், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இது தொடர்பாக புகார் அளித்து தீர்வு காண தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
செங்கத்தில் ஏரிக்கால்வாய்களை தூர்வார கோரிக்கை குப்பநத்தம் அணை திறந்தும் தண்ணீரின்றி வறண்ட ஏரிகள் (தி.மலை) பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ₹13.83 லட்சம் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பறிமுதல்
தண்டராம்பட்டு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
மொபட் திருடிய 2 சிறுவர்கள் கைது
பொதுமக்களை தாக்கிய சைக்கோ வாலிபர் செங்கத்தில் பரபரப்பு கற்கள், விறகு கட்டையால்
5 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்; கணவன் கைது செய்யாறு அருகே பரபரப்பு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்