தண்டராம்பட்டு அருகே முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது
1/22/2021 12:52:09 AM
திருவண்ணாமலை, ஜன.22: தண்டராம்பட்டு அருகே முகமூடி அணிந்து கொள்ளையடித்த 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டராம்பட்டு அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில், கடந்த மாதம் 20ம் தேதி பால் வியாபாரி ராஜா என்பவரது வீட்டுக்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி நுழைந்து, அங்கிருந்தவர்களை தாக்கி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில், ஆரணி ஆகாரம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்(26). சங்கராபுரம் அடுத்த பெருவல்லூர் கிராமத்தை சேர்ந்த கிரி(31), உளுந்தூர்பேட்டை அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்த மாரி(27) ஆகியோர், தொடர் குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, எஸ்பி அரவிந்த் பரிந்துரை செய்தார். அதன்பேரில், பாஸ்கர், கிரி, மாரி ஆகியோரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
செங்கத்தில் ஏரிக்கால்வாய்களை தூர்வார கோரிக்கை குப்பநத்தம் அணை திறந்தும் தண்ணீரின்றி வறண்ட ஏரிகள் (தி.மலை) பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ₹13.83 லட்சம் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பறிமுதல்
தண்டராம்பட்டு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
மொபட் திருடிய 2 சிறுவர்கள் கைது
பொதுமக்களை தாக்கிய சைக்கோ வாலிபர் செங்கத்தில் பரபரப்பு கற்கள், விறகு கட்டையால்
5 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்; கணவன் கைது செய்யாறு அருகே பரபரப்பு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்