காஞ்சிபுரம் சரிகை தொழிற்சாலையில் ஊழியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
1/22/2021 12:46:16 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் காரணமின்றி தொழிலாளரை பணிசெய்ய அனுமதி மறுத்த நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் தமிழக அரசின் சரிகை தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறை முடித்துவிட்டு பணிக்கு வந்த நிரந்தரத் தொழிலாளியான ஸ்டீபன் ராஜ் என்பவரை, தொழிற்சாலை நிர்வாகம் உள்ளே விடாமல் காவலாளியை கொண்டு வெளியேற்றி உள்ளது. இதை தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகி ரவி, சீனிவாசன் தலைமையில் தொமுச கவுன்சில் இளங்கோவன், அதிமுக சேகர் மற்றும் அருள், ஜனார்த்தனம், நந்தகோபால், நெடுஞ்செழியன் உள்பட ஊழியர்கள், நிர்வாகம் மற்றும் அடிப்படை வசதிகளை பறிக்கும் நிர்வாக இயக்குனரை கண்டித்து, தங்களது பணியை புறக்கணித்து தொழிற்சாலை உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மேலாண் இயக்குநர் ராஜேந்திரன், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், வெளியேற்றப்பட்ட தொழிலாளியை மீண்டும் பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு நிர்வாகம் சம்மதித்தது. இதையடுத்து அனைவரும் பணியை தொடர்ந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
பல கோடி மதிப்பில் அரசு துறை கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
மணிகண்டீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம்
திமுக முன்னாள் எம்எல்ஏ இல்ல திருமணம்: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு
படூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு? அங்கத்தினர் சரமாரி புகார்
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!