வேலூர் 1வது மண்டலத்தில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வீணாகும் அவலம்: அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை
1/21/2021 7:02:36 AM
வேலூர், ஜன. 21: வேலூர் 1வது மண்டலத்தில் தனியார் அமைப்பு மூலம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கபட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வீணாகும் நிலைய ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் வகையில் முன்கள பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இதில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டு வகையில் தனியார் அமைப்பினர் மூலம் பல்வேறு உதவி செய்தனர்.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உட்பட 630 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தனியார் அமைப்பு மூலம், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவர்களுக்கு ரெயின் கோர்ட், காலனி, பை வழங்கப்பட்டது. அதில் ஒரு சில தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. மீதமுள்ள பாதுகாப்பு உபகரணங்கள், சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வழங்காமல், 2 மாதங்களுக்கு மேலாக 1வது மண்டல அலுவலகத்தில் யாருக்கும் பயன்பாடாமல் அறையிலேயே பாழாகும் நிலையில் கிடக்கிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தூய்மை பணியாளர்கள் வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் முகக்கவசம் வினியோகம்
மீன் பிடி தடைக்காலம் எதிரொலி...! வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரிப்பு
போதையில் பைக் ஓட்டியவர் கைது
கே.வி.குப்பம் காவல்நிலையத்தில் வியாபாரிகளுடன் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் 75 சிறப்பு முகாம்கள் மூடல் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள் வேலூர் மாவட்டத்தில்
55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறை கண்காணிப்பாளர் தகவல்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!