மக்கள் கோரிக்கை செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்படுமா? ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
1/21/2021 4:08:04 AM
கரூர், ஜன. 21: கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் தடுப்பணை அருகே உள்ள பூங்கா சீரமைக்கப்பட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், தடுப்பணை அருகே பூங்கா வளாகம் உருவாக்கப்பட்டும் சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்தது. தற்போது பூங்கா பகுதிக்கு அதிகளவு மக்கள் செல்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக பூங்கா வளாகத்தில் உள்ள அனைத்து உபகரணங்களும் பழுதுடைந்தும், செடிகொடிகள் வளர்ந்தும் மோசமான நிலையில் உள்ளது. தற்போதைய நிலையில் அமராவதி ஆற்றில் செட்டிபாளையம் தடுப்பணை வழியாக தண்ணீர் சென்று கொண்டுள்ளது. அவ்வப்போது பொதுமக்களும் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். எனவே, இந்த பூங்காவை சீரமைத்து எப்போதும் மக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார் 25ம்தேதி, மே 1 மூடல்
கரூர் அருகே ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை கடையில் ரூ.79 ஆயிரம் திருட்டு
கரூரில் இரவில் பரபரப்பு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
அடுத்த கட்டிடத்தில் கம்ப்யூட்டர், ஏசி இயங்கியதால் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் குவிந்த திமுகவினர்
கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று
பிறந்த நாளையொட்டி தீரன் சின்னமலை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்