ஆட்டோவை சரி செய்தபோது பைக் மோதி ஓட்டுநர் பலி
1/20/2021 8:07:51 AM
சோமனூர், ஜன.20: கருமத்தம்பட்டியில் பழுதான ஆட்டோவை சரி செய்து கொண்டிருந்தபோது பைக் மோதி ஓட்டுநர் பலியானார். ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (40) என்பவர் நேற்று முன்தினம் இரவு கருமத்தம்பட்டி மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். அப்போது, ஆட்டோவின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனதால் மேம்பால ஓரத்தில் நிறுத்திவிட்டு டயரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கோவை வி.கே. அரங்கநாதர் வீதியை சேர்ந்த கார்த்தி என்பவர் எதிர்பாராதவிதமாக பிரகாஷ் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், பிரகாஷ் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கோவை அரசு மருத்துவமனையில் உலக செவித்திறன் விழிப்புணர்வு
போலி பத்திர எழுத்தர்களால் மக்கள் அவதி
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கிணத்துக்கடவு அருகே மூளைக்காய்ச்சலுக்கு 10ம் வகுப்பு மாணவன் பலி
அன்னூர் அருகே குடிநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு இரு தரப்பினர் இடையே தகராறு
வாலிபர் தற்கொலை
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!