நெல்லையில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும் துணைகமிஷனர் தகவல்
1/20/2021 1:55:51 AM
நெல்லை, ஜன.20: நெல்லையில் போக்குவரத்து விதிகளை மக்களுக்கு விளக்கும் வகையில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும் என மாநகர போலீஸ் துணைகமிஷனர் மகேஷ்குமார் தெரிவித்தார். சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி நேற்று வண்ணார்பேட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ நெல்லை மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி காமிராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இக்காமிராக்கள் மூலம் கொலை, கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களை கண்டறிந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
காமிராக்கள் மூலம் சாலை விதிமுறைகளை மீறுவோரையும் கண்டறிய முடிகிறது. மாநகர் பகுதியில் தொடர்ச்சியாக சிசிடிவி காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாநகரில் சாலை போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு, பாதுகாப்பு முறைகளை விளக்கும் வகையில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கப்படும்.’’ என்றார். இந்நிகழ்ச்சியில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், ஆய்வாளர் பர்வீன் பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 772 பேருக்கு கொரோனா தொடரும் உச்சத்தால் பொதுமக்கள் அச்சம்
இ.பாஸ், கோவிட் ஆர்டிபிசிஆர் சான்று கேட்பதால் கேரளாவுக்கு வேலைக்கு செல்பவர்கள் பாதிப்பு
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
களக்காடு அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
தென்காசி, கடையநல்லூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறப்பு
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!