27ம் தேதி தேரோட்டம் ஏர்போர்ட் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் மாற்று இடம் வழங்ககோரி பாதிக்கப்பட்ட மக்கள் மனு
1/19/2021 3:53:34 AM
திருச்சி, ஜன.19: திருச்சி ஏர்போர்ட் அம்பேத்கர்நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடப்பதால் குடியிருப்புவாசிகள் தங்களுக்கு மாற்று இடம் வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். திருச்சி ஏர்போர்ட் அருகே அம்பேத்கர்நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள் கூறுகையில், ‘திருச்சி ஏர்போர்ட் அருகே அண்ணா அறிவியல் கோளரங்கம் எதிரே 300க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் ஏர்போர்ட் நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன் எங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் ‘எவ்வித அங்கீகாரமின்றி ஏர்போர்ட்டுக்கு சொந்தமான இடத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர். திடீரென வீடுகளை காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கு செல்வது. தற்போது எங்கள் குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது. உரிய மாற்று இடம் வழங்க வேண்டும்’ என்றனர்.
மேலும் செய்திகள்
அதிகாரிகள் திடீர் ஆய்வில் அதிரடி சிறைவாச ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ்
ஜி.ஹெச் வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு
நர்சிங் மாணவி தற்கொலை
மயங்கி விழுந்து காவலாளி சாவு
திருச்சி மாவட்டத்தில் 8.3 டன் விதைகள் விற்க தடை விதிப்பு
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!