அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு அய்யனார் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், கோயில் மணி திருட்டு
1/19/2021 3:29:15 AM
ஜெயங்கொண்டம், ஜன.19: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளபிள்ளையார் தெருவில் மிகவும் பழமைவாய்ந்த அய்யனார் கோயிலில் விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு பூசாரி சின்னதம்பி கோயில் விளக்கேற்றிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் காலை பூசாரி சின்னதம்பி கோயில் பூட்டை திறக்க முயன்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஊர் முக்கியஸ்தர்களுடன் கோயில் உள்ளே சென்று பார்த்தபோது 66 கிலோ எடை கொண்ட கோயில் மணி, 3 குத்துவிளக்கு, உண்டியல் உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பு பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசாரிடம் கோயில் அலுவலர் சம்பத் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மேலும் செய்திகள்
அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்
விரைந்து முடிக்க வலியுறுத்தல் திருமானூர் நிலையத்தில் விதை சுத்திகரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் வேளாண் இணை இயக்குநர் அறிவுறுத்தல்
தா.பழூர் ஒன்றிய அளவில் கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற பள்ளி மாணவி
தஞ்சையில் இருந்து கோதுமை மூட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
டிரைவர் காயம் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பேருந்துகள் நேரம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!