சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி
1/19/2021 3:26:48 AM
நாகை, ஜன.19: சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நேற்று நடந்தது. 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழா நேற்று தொடங்கி பிப்ரவரி மாதம் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் தனபாலன் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளில் வழங்கினார். இதில் தலைகவசம் உயிர் கவசம், தலை கவசம் அணிந்து உயிரிழப்பை தவிர்க்க வேண்டும். போதையில் பயணம் மரணத்தை ஏற்படுத்தும், குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனத்தை முந்தி செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
சாக்கு பற்றாக்குறையால் 16,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேக்கம்
தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டிய விசி நிர்வாகிகள் மீது வழக்கு
கலெக்டர் தகவல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் 150 ஆண்டுகளுக்கு பிறகு கீரங்குடி குடவரசி அம்மன் கோயிலில் தெப்ப திருவிழா
வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமான பண பரிவர்த்தனை கண்காணிக்கப்படும்
3 பறக்கும் படைகள் அமைப்பு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக விடையாற்றி விழா
நாகை மாவட்டத்தில் 48 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை