மது, குட்கா விற்ற 63பேர் கைது 400 மதுபாட்டில்கள் பறிமுதல்
1/17/2021 2:17:27 AM
தர்மபுரி, ஜன.17: திருவள்ளுவர் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அந்தந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்து கடைகளில் மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக தர்மபுரியில் 14 பேர், அரூர் 13 பேர், பென்னாகரம் 11 பேர் மற்றும் பாலக்கோட்டில் ஒருவர் என மாவட்டம் முழுவதும் 39 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், குட்கா விற்றதாக தர்மபுரியில் 5பேர், அரூர் 8பேர், பென்னாகரம் 7பேர், பாலக்கோடு 4 பேர் என மொத்தம் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
5 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் 12,810 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் முதல்கட்டமாக 15 போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘பாடி கேமரா’ வழங்கல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி கட்சிக் கூட்டங்கள் வீடியோவில் பதிவு
கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் பெண் விவசாயி திடீர் தர்ணா
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!