வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
1/17/2021 2:16:58 AM
தர்மபுரி, ஜன.17: பொங்கல் பண்டிகை முடிந்த பின் வரும் கரிநாளில், அசைவ உணவு சமைத்து சாப்பிடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சனிக்கிழமையான நேற்று கரிநாள் வந்ததால், தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் அசைவம் தவிர்த்தனர். இதன் காரணமாக, இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தர்மபுரி கடைவீதி, திருப்பத்தூர் சாலை, கந்தசாமி தெரு, மதிகோன்பாளையம், பழைய தர்மபுரி, இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி, அதியமான்கோட்டை என மாவட்டம் முழுவதும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தர்மபுரியில் நேற்று ஆட்டிறைச்சி கிலோ ₹800 வரையும், பிராய்லர் சிக்கன் ₹180 வரையும், நாட்டுக்கோழி கிலோ ₹350 வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனை அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
5 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் 12,810 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் முதல்கட்டமாக 15 போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘பாடி கேமரா’ வழங்கல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி கட்சிக் கூட்டங்கள் வீடியோவில் பதிவு
கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் பெண் விவசாயி திடீர் தர்ணா
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!