பாதாள சாக்கடை பணிகளை முடிக்க கோரி காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் கடைகள் அடைப்பு
1/13/2021 7:13:18 AM
காரைக்குடி, ஜன.13: காரைக்குடியில் பாதாளச்சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள், வணிகர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை பணிகள் முடியாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை அப்படியே போட்டுள்ளனர். மக்கள் பள்ளங்களில் விழுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக பாதாள சாக்கடை பணியால் சாலைகள் சேறும் சகதியாக காட்சியளிக்கின்றன. இதனை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே பாதாளசாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, செஞ்சை, கீழஊரணி, ரஸ்தா, புளியமரத்தடி, பாப்பா ஊரணி, கணேசபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் வணிகர்கள் நேற்று பழைய பஸ்ஸ்டாண்டு முன்பு கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
இன்று மின்தடை
கொரோனா தடுப்பு பிரிவு ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மனு
சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அடிக்கடி பழுதாகும் மின்வாரிய சர்வர் ஆன்லைனில் பணம் கட்ட முடியாமல் தவிப்பு
காளையார்கோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மானாமதுரையில் பாதாளச்சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்