கொத்தப்புள்ளி பூவோடையில் மழைநீரில் மூழ்கிய ரயில்வே சுரங்க பாதை எம்பி ஆய்வு
1/13/2021 6:48:34 AM
சின்னாளபட்டி, ஜன. 13: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புளி ஊராட்சிக்குட்பட்டது பூவோடை. இதனருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைதான் தேவர்மலை, ஜக்காலம்மன்பட்டி உள்பட பல கிராமங்களுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. சிறுமழை பெய்தால்கூட இந்த சுரங்க பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம். தற்போது பெய்து வரும் தொடர்மழையால் சுரங்க பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வருவோர் 5 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து கொத்தப்புளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரெங்கசாமி, வேலுச்சாமி எம்பியிடம் புகார் அளித்தார். இதன்பேரில் எம்பி, ரயில்வே சுரங்க பாதையை ஆய்வு செய்து, மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார். உடன் கொத்தப்புளி ஊராட்சிமன்ற செயலர் செந்தில்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன் மற்றும் கிராமமக்கள் இருந்தனர்.
மேலும் செய்திகள்
பூத்து குலுங்கும் கனகாம்பரம்... ஒட்டன்சத்திரம் அருகே வீட்டை உடைத்து 30 பவுன் திருட்டு
நீர் மோர் பந்தல் திறப்பு
மது விற்றவர் கைது
மா வாசனைக்கு யானை வரும் கொடைக்கானல் சாலையில் இரவில் தங்கக்கூடாது
பழ வியாபாரிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை வாகனஓட்டிகள் அவதி கொரோனா விழிப்புணர்வு
செங்கல் சூளையில் சிக்கிய கட்டுவிரியன்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்