கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு
1/13/2021 4:38:51 AM
திருவெறும்பூர், ஜன. 13: காவிரி டெல்டாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியாற்றில் கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் முழுவதும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி டெல்டாவில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி மற்றும் ஒருபோக நெற்பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் காவிரியில் கல்லணைக்கு வினாடிக்கு 3,509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதை பொதுப்பணித்துறையினர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆறுகளில் திறக்காமல் ஒட்டுமொத்தமாக கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை திறந்து விட்டனர். இந்த தண்ணீர், வீராணம் ஏரிக்கு சென்றடையும்.
மேலும் செய்திகள்
முககவசம் அணியாத 700 பேர் மீது வழக்குப்பதிவு மாநகர காவல்துறை நடவடிக்கை
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.46.63லட்சம் உண்டியல் காணிக்கை
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு துவக்கம்
வாலிபருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலை
வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
ராம்ஜிநகர் அருகே விபத்து லாரி -கார் மோதல் வாலிபர் பலி, 3 பேர் காயம்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!