கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு
1/13/2021 4:38:51 AM
திருவெறும்பூர், ஜன. 13: காவிரி டெல்டாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியாற்றில் கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் முழுவதும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி டெல்டாவில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி மற்றும் ஒருபோக நெற்பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் காவிரியில் கல்லணைக்கு வினாடிக்கு 3,509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதை பொதுப்பணித்துறையினர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆறுகளில் திறக்காமல் ஒட்டுமொத்தமாக கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை திறந்து விட்டனர். இந்த தண்ணீர், வீராணம் ஏரிக்கு சென்றடையும்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் 23,32,886 வாக்காளர்கள்
புதிதாக 72,447 பேர் சேர்ப்பு ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் தண்ணீர் கலந்து மதுவிற்ற ரவுடி கைது
லேத் பட்டறை மெக்கானிக்கிடம் கத்தியைகாட்டி பணம் பறித்தவர் கைது
திருச்சி-தஞ்சை திருமண்டலத்தின் 37வது பேரவைக்கூட்டம்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்