தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
1/13/2021 4:38:37 AM
மணப்பாறை, ஜன. 13: மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள அதிகாரம், சடவேலாம்பட்டி, கரடிபட்டி, அம்மாபட்டி, செட்டியப்பட்டி, வலையப்பட்டி, நாட்டார்பட்டி, பிடாரப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நெற்பயிர், கடலை, உளுந்து அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் நெற்பயிர் மட்டுமின்றி உளுந்து, பருத்தி, கடலை மற்றும் பூச்செடிகள் நீரில் மூழ்கி அழுக துவங்கியுள்ளது. ஆனால் வருவாய்த்துறை, வேளாண்துறை இணைந்து சேதமடைந்த நெற்பயிர்களை மட்டுமே கணக்கெடுத்து வருகின்றனர். மானாவாரி பயிர்களின் சேதத்தை கணக்கெடுக்கவில்லை. எனவே சேதமடைந்த கடலை, உளுந்து உட்பட தோட்டக்கலை பயிர்களையும் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்தி அழுகிய பூச்செடிகள், கடலை மற்றும் உளுந்து பயிர்களுடன் மருங்காபுரி தோட்டக்கலைத்துறை அலுவலகம் முன் கொட்டும் மழையில் திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் கிடைத்ததும் மருங்காபுரி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் 23,32,886 வாக்காளர்கள்
புதிதாக 72,447 பேர் சேர்ப்பு ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் தண்ணீர் கலந்து மதுவிற்ற ரவுடி கைது
லேத் பட்டறை மெக்கானிக்கிடம் கத்தியைகாட்டி பணம் பறித்தவர் கைது
திருச்சி-தஞ்சை திருமண்டலத்தின் 37வது பேரவைக்கூட்டம்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்