பொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம்
1/13/2021 4:38:31 AM
திருச்சி, ஜன. 13: நலவாரியம் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. நலவாரியத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் சேர தகுதியிருந்தும் குறைவான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் கட்டுமான வாரியத்தில் நிதி இருப்பதால் கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்கள், பொங்கல் தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது. இதுபோல் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் உபகரணங்கள், பொங்கல் தொகுப்பு வழங்க வலியுறுத்தி திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தொழிலாளர் நலவாரியம் முன் நேற்று சிஐடியூ ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கம் சார்பில் பொங்கல் வைக்கும் போராட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் மணிகண்டன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் அவர்களது கோரிக்கை மனுவை நலவாரிய உதவி ஆணையரிடம் வழங்கினர். போராட்டத்தையொட்டி நலவாரியம் அலுவலகம் அருகே கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் செய்திகள்
வரி விளம்பரங்கள் ஞாயிறுதோறும் படியுங்கள் தேர்தல் பாதுகாப்பு பணி திருவானைக்காவல் அருகே கவுத்தரசநல்லூரில் கொத்திப் போட்டதோடு நிறுத்தப்பட்ட சாலை பணி
தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் அனைத்து கட்சியினர் கோரிக்கை விடு
லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
திருச்சி ஏர்போர்ட்டில் ஜெல் வடிவில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள், ேபாலீசார் அணிவகுப்பு நடந்துகூட செல்ல முடியாமல் மக்கள் அவதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 7ம் தேதி பூச்சொரிதல் விழா துவக்கம்
கே.சாத்தனூர் சார்பதிவாளர் பொறுப்பேற்பு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்