பாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி
1/13/2021 1:59:16 AM
ேவலூர், ஜன.13:கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த பாமக முன்னாள் நகர செயலாளர் குண்டாசில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் கொசப்பேட்டையில் லட்சுமணபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(47), பாமக முன்னாள் நகர செயலாளர். இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க சீட் வாங்கித்தருவதாக கூறி வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் பல லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் வெங்கடேசனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் விசாரணையில், வெங்கடேசன் பலரிடம் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடி செய்தது தெரியவந்தது.இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு, எஸ்பி செல்வகுமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில், ெவங்கடேசன் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதற்கான நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சிஎஸ்ஆர் கொடுக்காமல் புகார்தாரர்களை அலைக்கழித்த எழுத்தர் ஆயுதப்படைக்கு மாற்றம்
கார் மோதி 2 மூதாட்டிகள் பலி குடியாத்தம் அருகே சோகம் 100 நாள் வேலைக்கு சென்று திரும்பியபோது
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே 4வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
அரசு பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி; தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதல்
கால்நடை மருத்துவக்குழு தீவிர ஆய்வு வேலூர் பாலாற்றில் செத்து மடிந்த 7 ஆயிரம் வாத்துகளுக்கு வைரஸ் தொற்று
வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேர் கைது
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!