அணைக்கட்டு அருகே வாட்டர் பாட்டில்களில் சாராயம் கடத்தியவர் கைது
1/12/2021 6:27:48 AM
அணைக்கட்டு, ஜன.12: அணைக்கட்டு அருகே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அணைக்கட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை அப்புக்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் நிலையில் பையுடன் நடந்து சென்றவரை பிடித்து விசாரித்தனர். அவர் அப்புக்கல் சித்தேரியை சேர்ந்த கோவிந்தன்(45) என தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில், 1 லிட்டர், அரை லிட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் சாராயம் இருப்பது தெரியவந்தது. மேலும், போலீசுக்கு தெரியாமல் மலையடிவாரத்தில் இருந்து ஊருக்கு சாராயத்தை கடத்திச்சென்றது தெரியவந்தது.
பல மாதங்களாக இந்த கடத்தலில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 1 லிட்டர், 2 லிட்டர், அரை லிட்டர் என மொத்தம் 12 வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக பேரல், லாரி டியூப்கள், பிளாஸ்டிக் கவர்களில் சாராயம் வைத்து விற்பனை செய்து வந்த நிலையில், நூதன முறையில் வாட்டர் பாட்டில்களில் சாராயம் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் முகக்கவசம் வினியோகம்
மீன் பிடி தடைக்காலம் எதிரொலி...! வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரிப்பு
போதையில் பைக் ஓட்டியவர் கைது
கே.வி.குப்பம் காவல்நிலையத்தில் வியாபாரிகளுடன் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் 75 சிறப்பு முகாம்கள் மூடல் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள் வேலூர் மாவட்டத்தில்
55 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறை கண்காணிப்பாளர் தகவல்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!