தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் நாய்களுக்கு விநோத நோய் தாக்குதல்
1/11/2021 4:46:14 AM
தஞ்சை,ஜன.11: தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் நாய்களுக்கு விநோத நோய் தாக்கியுள்ளதால், முடிகள் உதிருந்து விகாரமாக உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்ப்பட்ட 1 வது வார்டு பள்ளியக்ரஹாரத்தில், சுமார் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் உள்ளன. இப்பகுதியில் சுமார் நுாற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிந்து வருகின்றது. வீட்டில் வளர்க்கும் நாய்கள் மட்டுமின்றி தெருவில் சுற்று நாய்களுக்கு கடந்த சில நாட்களாக நாய்களின் உடலிலுள்ள முடிகள் உதிர்ந்து வருகின்றது. மேலும், முடிகள் உதிர்வதால் ஏற்படும் அரிப்பால், உடல்களை கடித்தும், நகங்களால் கீருவதால், உடலில் ரத்து சொட்டுகிறது. இது போல் நாய்களால் தெருவில் மற்றும் வீடுகளிலுள்ள நாய்களுக்கு பரவுவதால், பள்ளியக்கிரஹாரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு முடி உதிரும் விநோத நோய் வந்துள்ளது. எனவே, தற்போது சீதோஷன நிலை மாற்றத்தால் பல்வேறு நோய்கள் பரவும் நிலையில், தஞ்சை பள்ளியக்கிரஹாரம் பகுதியிலுள்ள நாய்களுக்கு உருவாகியுள்ள வினோத நோய் குறித்து உடனடியாக சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அரவிந்த கூறுகையில், தஞ்சை பள்ளியக்கிரஹாரத்திலுள்ள நாய்களுக்கு விநோதமான முடிகள் உதிர்ந்து வருகிறது. இதனால் அந்த நாய் மேல் துர்நாற்றமும், அரிப்பினால் கடித்தும், நகங்களால் கீரிக்கொள்வதால், ரத்தங்கள் வெளியேறுகின்றது. இந்த நாய் மற்ற நாயுடன் சேரும் போது, அந்த நாய்க்கும் முடிகள் உதிருந்து விகாரமாகி விடுகிறது. மேலும், முடி உதிர்ந்த நாய்கள், உணவு விடுதிகளின் அருகில் சென்று, மீதமான உணவு சாப்பிடும் போது, அதிலுள்ள பாத்திரங்களில், அந்த நாயின் எச்சில் பட்டால், அதனை உபயோகிக்கும் கடைகார்களின் நிலை கேள்வி குறியாகும். தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில், முடி உதிருந்த நாய்கள் மழையில் நனைந்து, அந்த தண்ணீரில், மக்கள் நடந்து சென்றால், அவர்களது உயிர் கேள்வி குறியாகும். எனவே, மாவட்ட நிர்வாகம், தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் முடி உதிர்ந்து விநோதமான நோயிடன் திரியும் நாய்களை பிடித்து, மருத்துவ வசதி செய்து, மற்ற நாய்களுக்கு பரவாமல், பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
சித்திரை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய விதைகள் இருப்பு 50 சதவீத மானியத்தில் பெற்று பயன்பெறலாம் கொடியேற்றத்துடன் திருகோடீஸ்வரசுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ விழா துவக்கம்
திருப்புவனம் பேரூராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம்
மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.30 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும்
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்
கோயில் வாசலை அடைத்து அமைக்கப்பட்ட மின்சார கேபிள் ஜங்ஷன் பெட்டி இடமாற்றம்
கொரோனா வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்கப்படுகிறதா? அதிகாலை ஆய்வு செய்த அதிகாரிகள்