பணி நிரந்தரம் செய்ய கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
1/7/2021 2:51:48 AM
புதுக்கோட்டை, ஜன.7: ஒப்பந்த பணியில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டுச் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் நாச்சாரம்மாள் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜபருல்லா, மாவட்ட செயலர் ரெங்கசாமி, செவிலியர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர். அனுநந்தனா, பொருளாளர் பொ. அனுசுயா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர். மாநிலம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 11 ஆயிரம் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வரும் 11ம் தேதி மண்டல அளவில் உண்ணாவிரதப் போராட்டங்களும், 28ம்தேதி சென்னையில் தர்ணா போராட்டமும் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பயணிகள் கடும் அவதி கறம்பக்குடி பேரூராட்சியில் நிலுவையில் இருந்த ரூ.42 லட்சம் வரி பாக்கி வசூல் செய்த அலுவலர்களுக்கு பாராட்டு
பகவாண்டிப்பட்டியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்
பணியாளர்கள் பற்றாக்குறையால் கூடுதல் பேருந்து இயக்குவதில் சிக்கல்
தொடர் நஷ்டம் ஏற்படும் அபாயம் திருமயம் அருகே சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலை
விராலிமலை முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி வாகன விற்பனையில் 20 சதவீதம் சரிவு
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்