மன்னார்குடி அரசு கல்லூரியில் கொரோனா சிறப்பு பரிசோதனை முகாம்
12/30/2020 5:36:20 AM
மன்னார்குடி, டிச.30: மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரியில் கோவிட் 19 சிறப்பு பரி சோதனை முகாம் நடைபெற்றது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் கோவிட் பாதுகாப்பு மையம் இணைந்து கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான கோவிட்19 சிறப்பு முகாம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் அறிவுடைநம்பி துவக்கி வைத்தார்.
பேராசிரியர்கள் ரவி, மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில், மன் னார்குடி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அபூர்வத்தமிழன் தலைமையிலான மருத்துவ மருத்துவக் குழுவினர் கொரோனா பரிசோதனைக்காக 101 பேராசிரியர் களுக் கும், 150 முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களுக்கு சளி மாதிரி எடுத்தனர். முகாமில் என்எஸ்எஸ் அலுவலர்கள் சத்தியாதேவி, ஆகாஷ், ஜென்னி, ராஜ் குமார், இளையோர் செஞ்சிலுவை சங்க கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மகேஷ், செஞ்சுருள் சங்கம் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக என்சிசி அலுவலர் ராஜன் வரவேற்றார். என்எஸ்எஸ் அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
திருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்
கலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்
அறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்
திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை
நிறுத்தப்பட்ட ஊக்க தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும்
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!