காணொளியில் கலந்துரையாடல் பிரதமர் மோடி நிகழ்ச்சியை டிவியில் பார்த்த விவசாயிகள்
12/27/2020 4:50:48 AM
புதுக்கோட்டை, டிச.27: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வேளாண்மை அலுவலகம் மற்றும் வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண்மை அறிவியல் மைய கட்டிடத்தில் பாரத பிரதமர் விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நலத்திட்டங்களை வழங்கி விவசாயிகளுடன் கலந்துரையாடல் செய்த காணொளிக் காட்சியை 100 விவசாயிகளுடன் அமர்ந்து தொலைக்காட்சியில் விவசாயிகள் பார்வையிட்டனர். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் தலைமையில் கொம்பன் தேசிய பயிர் வகை ஆராய்ச்சி மைய தலைவர் (பொறுப்பு) பிரபுகுமார் முன்னிலையில் நடைபெற்ற விவசாயிகள் பயிற்சி முகாமில் திருவரங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கி வரும் கோடிக்கணக்கான மதிப்பிலான விவசாய நலத்திட்டங்களை பற்றியும்,
அதனை விவசாயிகள் முழுமையாக பெற்று பயன் அடைய முறையாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கிடைத்திட ஆலோசனை வழங்கினார். மேலும் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய திட்டங்களை ஒவ்வொரு விவசாய குடும்பத்தில் உள்ளவர்களும் பெற்றிட துரித நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன் நிரவி புயல் காரணமாக 2,000 ஏக்கர் பரப்பளவில் நெல், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு இருந்தது. இதில் 800 ஏக்கர் பரப்பளவிற்கு உரிய ஆவணங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பேசினார்.
ஏம்பல் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி இயக்குனர் பொறுப்பு பிரபுகுமார் தென்னையை தாக்கும் நோய் பற்றியும், சென்னை பின்னூட்டம் இடுவது பற்றியும், காண்டாமிருக வண்டுகளிடம் இருந்து தென்னை மரத்தை பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் மற்றும் வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
கோவிட் கட்டுப்பாட்டு நேரங்களில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி தடையின்றி கிடைக்க நடவடிக்கை
கலெக்டர் தகவல் பொன்னமராவதி ஒன்றியத்தில் தடுப்பூசி போட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு
வேளாண்மை இணை இயக்குநர் தகவல் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு அரசு நிவாரண உதவி கிடைக்குமா?
நரிக்குறவர் சமூகத்தினர் எதிர்பார்ப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை அமோகம்
பயணிகள் கடும் அவதி கறம்பக்குடி பேரூராட்சியில் நிலுவையில் இருந்த ரூ.42 லட்சம் வரி பாக்கி வசூல் செய்த அலுவலர்களுக்கு பாராட்டு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்