திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை கோயில் நிர்வாகம் அறிவிப்பு
12/24/2020 4:32:41 AM
புதுக்கோட்டை, டிச.24: திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனா வைரஸ் பரவலைத்தவிர்க்கும் வகையில் அதிகாலை வழக்கமாக நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு, சாமி புறப்பாடு ஆகியன ஆகம விதிப்படி நடைபெறும். உபயதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் யாருக்கும் அனுமதியில்லை. அதன்பிறகு காலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்கள் வந்து செல்லலாம். 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று புதுக்கோட்டை கோயில்கள் செயல் அலுவலர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
திருமயம் அருகே திருவேட்டழகர் கோயில் வளாகத்தில் சிமெண்ட் கல் தளம் திறப்பு
டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பணிமனையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் ஆடி தேரோட்டம்
பொன்னமராவதி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
கந்தர்வகோட்டை வெள்ளை முனியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜை
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ண கொடி ஏற்ற பிரசாரம்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...