ராயனூர், பொன்நகர் அருகே நிழற்குடை அமைக்கப்படுமா?
12/17/2020 2:43:23 AM
கரூர், டிச. 17: ராயனூர் பொன்நகர் நான்கு ரோடு சந்திப்பு அருகே நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் அடுத்து பொன்நகர் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து தாந்தோணிமலை, கோடங்கிப்பட்டி போன்ற நான்கு வழிகளில் சாலைகள் பிரிகிறது. தினமும் நு£ற்றுகணக்கானோர் இங்கு வந்து அந்த வழியாக செல்லும் பேரூந்துகளில் ஏறிச் சென்று வருகின்றனர். இந்நிலையில், பொன்நகர் சந்திப்பு பகுதியில் ஏற்கனவே இருந்த நிழற்குடை அகற்றப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் ஒதுங்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் மக்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நகராட்சி, பேரூராட்சி எம்பிசி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
கரூர் மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் கலவை உரம் தயாரிப்பு
விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் திருவள்ளுவர் மைதானபகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் கூடை முடையும் தொழிலாளர்கள்
சொத்தை மாற்றிய வழக்கு அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!