மாப்பிள்ளையூரணி குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
12/15/2020 6:11:30 AM
தூத்துக்குடி, டிச. 15: தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மாப்பிள்ளையூரணி பகுதி குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி சவேரியார்புரத்தை சேர்ந்தவர் மரியபாக்கிய சவரிமுத்து மகன் ஜோஸ்வா (22). சென்னையில் எம்சிஏ இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று நண்பர்களுடன் மாப்பிள்ளையூரணி பகுதி குளத்திற்கு சென்று குளித்துகொண்டிருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி ஜோஸ்வாவின் உடலை மீட்டனர். புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் மில்லர்புரத்தைச் சேர்ந்த வாலிபர் அன்புராஜ் என்பவர் நேற்று முன் தினம் மூழ்கி பலியான நிலையில் மாப்பிள்ளையூரணி குளத்தில் கல்லூரி மாணவர் நேற்று உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
பெருங்குளம் செங்கோல் ஆதீனம் மடத்தில் குருபூஜை விழா
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
ஆனந்தவிளையில் அபாய நிலையில் டிரான்ஸ்பார்மர்
முத்தையாபுரம் அருகே காவலாளியை தாக்கியவர்கள் மீது வழக்கு
வைகுண்டம் பகுதியில் இன்று மின்தடை
வாசுதேவநல்லூரில் அதிமுகவினர் நீர்மோர், கபசுரக்குடிநீர் வழங்கல்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்