கரூர் சர்ச் கார்னர் பகுதியில் நிழற்குடை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
12/10/2020 11:52:59 PM
கரூர், டிச. 11: கரூர் சர்ச் கார்னர் பகுதியில் உள்ள நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் சர்ச் கார்னர் பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. சர்ச் கார்னர் பகுதியில் இருந்து வாங்கல், நெரூர், மண்மங்கலம், வாங்கப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும் சர்ச் கார்னர் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறிச் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிழற்குடை உட்புறமும், மேற்புற பகுதிகளும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக இந்த பகுதியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மழைக்காலங்களில் ஒதுங்க கூட முடியாத அளவில் இந்த நிழற்குடை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நிழற்குடையை சீரமைத்து, பயணிகள் பயமின்றி பயன்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
நகராட்சி, பேரூராட்சி எம்பிசி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
கரூர் மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் கலவை உரம் தயாரிப்பு
விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் திருவள்ளுவர் மைதானபகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் கூடை முடையும் தொழிலாளர்கள்
சொத்தை மாற்றிய வழக்கு அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!