மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 31 பேருக்கு ₹2.34 லட்சம் நலத்திட்ட உதவிகள்
12/4/2020 6:50:30 AM
தர்மபுரி, டிச.4: தர்மபுரி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கருணை இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகா, 31 பயனாளிகளுக்கு ₹2.34லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்குதல் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில், மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்த 57 சாதாரண நபர்களுக்கு ₹31.48 லட்சம் திருமண உதவித்தொகை, 4042 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், 4049 நபர்களுக்கு இலவச பஸ் பாஸ், 926 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹2,81,41,300 மதிப்பில் உதவி உபகரணங்கள், 2357 மாணவ, மாணவிகளுக்கு ₹60.33 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
மேலும் செய்திகள்
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 91 துணை ராணுவத்தினர் தர்மபுரிக்கு வருகை
தேர்தல் விதிமுறையையொட்டி எம்எல்ஏக்கள் ஆபிஸ் பூட்டி சீல் வைப்பு
உரிய ஆவணங்களின்றி ₹50ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி 484 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
தர்மபுரி அருகே தைல மில்லுக்கு தீ வைப்பு லட்சக்கணக்கில் சேதம்
இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்