புரெவி புயல் மீட்பு பணிக்காக சேதுபாவாசத்திரம், முத்துப்பேட்டைக்கு குடந்தை தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்
12/4/2020 4:16:58 AM
கும்பகோணம், டிச. 4: புரெவி புயல் மீட்பு பணிக்காக சேதுபாவாசத்திரம், முத்துப்பேட்டை பகுதிக்கு குடந்தை தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுடன் சென்றனர். புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புரெவி புயல் நேற்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்து தமிழ்நாட்டை நோக்கி வந்தது. இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கும்பகோணம் தீயணைப்புத்துறை சார்பில் முன்னணி தீயணைப்பு வீரர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்காக முத்துப்பேட்டை, சேதுபாவசத்திரம் போன்ற பகுதிகளுக்கு சென்றனர். மீட்பு பணிக்காக ரப்பர் படகு, மரம் அறுக்கும் இயந்திரம், ராட்சத டார்ச்லைட், லைப்ஜாக்கெட், ஸ்டெச்சர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை எடுத்து சென்றனர்.
மேலும் செய்திகள்
திருட்டு, காணாமல் போன ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன் மீட்பு
குடவாசல் பஸ் நிலையத்தில் சுகாதாரமற்று பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, வாஷ்பேஷின்
திருவாரூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி
சிஐடியூ வலியுறுத்தல் உரிமையாளர்களிடம் எஸ்பி ஒப்படைப்பு தொற்று நோய் பீதியில் பொதுமக்கள் நன்னிலம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.25 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை
பட்டப்பகலில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகை நூதன திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
தஞ்சையில் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா செயல்படவில்லை
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்