புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக வேதையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்
12/4/2020 12:06:52 AM
வேதாரண்யம்,டிச.4: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வேதாரண்யம் வந்துள்ளனர்.
இலங்கையில் புரெவி புயல் கரை கடந்த நிலையில் வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, கோடியகரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் சீற்றமாக உள்ளது.கடல் நீரும் மழை நீரும் மீனவ கிராமங்களை சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை பொதுமக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் வடிய வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் நோக்கி புயல் செல்லும் நிலையில் வேதாரண்யம் பகுதியில் புயல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் 47 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டுள்ளனர். புயல் மற்றும் மழை காலங்களில் ஏற்படும் சேதங்கள் இருந்து உடனடியாக மக்களை மீட்க தயாராக உள்ளோம் என தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கயிலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்
ரூ.3,000 உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் முயற்சி
400 காலி பணியிடங்களுக்கு கால்நடை உதவியாளர் நேர்முக தேர்வு
விளக்கு ஏற்றி உறுதிமொழி நித்திய கல்யாண பெருமாள் கோயில் தேரோட்டம்
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 கேட்டு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!