செட்டிநாடு காலிபிளவர் சூப்
2022-08-03@ 17:49:41

தேவையான பொருட்கள்:
காலிபிளவர் - 1 1/4 கப்
பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1-2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 3 பல்
இஞ்சி - 1/2 இன்ச்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4-5 (நீளமாக கீறியது)
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு
பட்டை - 1 இன்ச்
கல்பாசி - 1
பிரியாணி இலை - 1
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - 1
சோம்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது காலிபிளவரைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். காலிபிளவர் முக்கால்வாசி வெந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, நீரை வடிகட்டி தனியாக காலிபிளவரை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து சேர்த்து, அத்துடன் 1 1/2-2 கப் நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு வேக வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து, 3-4 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, இறுதியாக கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து அடுப்பை அணைத்தால், சுவையான செட்டிநாடு காலிபிளவர் சூப் தயார்.
மேலும் செய்திகள்
கேரட், வெள்ளரிக்காய், ஆரஞ்சு ஜூஸ்
கோதுமை ஃபலூடா
ஈரல் மாங்காய் சூப்
ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி
காளான் தேங்காய் பால் சூப்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!