வாழைத்தண்டு புலாவ்!!
2022-06-27@ 17:50:26

தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 1 கப்,
வாழைத்தண்டு - பெரிய துண்டு,
மோர் - 2 கப்,
தண்ணீர் - தேவையான அளவு,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
பிரிஞ்சி இலை - 2,
பட்டை - ஒரு சிறிய துண்டு,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
நெய்,
உப்பு - தேவையான அளவு,
புதினா - சிறிதளவு.
செய்முறை :
முதலில் பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின் வெங்காயம், புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மோரில் ஊறவைத்து, மோரை வடித்துவிட்டு, குக்கரில் வாழைத்தண்டைப் போட்டு 2 விசில் விட்டு எடுக்க வேண்டும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கி வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் ஒரு கப் மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பின் கொதி வந்தவுடன் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை நன்கு களைந்து கொதிக்கும் கலவையில் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவிட வேண்டும்.
Tags:
வாழைத்தண்டு புலாவ்!!மேலும் செய்திகள்
பட்டாணி கேரட் அடை
மூளி சப்ஜி
வெந்தயக்கீரை தொக்கு
மாமிடிகாய புளிஹோரா
வாழைக்காய் கறியமுது
பள்ளிபாளையம் காளான் பிரை
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!