பருப்பு தக்காளி அடை
2021-01-19@ 17:42:25

என்னென்ன தேவை?
தக்காளி - 3,
பாசிப்பயறு - 100 கிராம்,
பச்சரிசி - 200 கிராம்,
புழுங்கலரிசி - 200 கிராம்,
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
சோம்பு - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1/2 இன்ச் அளவு,
பெரிய வெங்காயம் - 1, உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
கடலைப்பருப்பு - 100 கிராம்,
துவரம்பருப்பு - 100 கிராம்,
காய்ந்தமிளகாய் - 3,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
பட்டை,
கிராம்புத்தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பயறு அனைத்தையும் 3 மணி நேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய்த்துருவல், தக்காளி, காய்ந்தமிளகாய், இஞ்சி, பட்டை, கிராம்புத்தூள் சேர்த்து அரைத்து, உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து அடை மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெயை ஊற்றி, இருபுறமும் நன்கு வெந்து மொறு மொறுவென்று வந்ததும் எடுக்கவும். தக்காளிச் சட்னி, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: தேங்காய்த்துருவலை அரைக்காமல் அப்படியே துருவிய தேங்காயை அடைமாவில் கலந்தும் அடை சுடலாம்.
Tags:
பருப்பு தக்காளி அடைமேலும் செய்திகள்
கேழ்வரகு வடை
தவலை அடை
கேழ்வரகு பக்கோடா
நெல்லிக்காய் பச்சடி
ராகி சேமியா கேரட், கோஸ் அடை
5 மாவு மிக்ஸ் பணியாரம்
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!