முருகனருள் பெற்ற அடியார்கள்
2023-02-07@ 13:10:38

நன்றி குங்குமம் ஆன்மிகம்
சிவபெருமான், அகத்தியர், அருணகிரி நாதர் மூவரும் முறையே தேவதேவர், முநி சிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று முருகனருள் பெற்று போற்றப்படுகின்றனர்.
* பன்னிரண்டு ஆண்டுகள் முருகப்பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.
* முருகப்பெருமானின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு பெற்றவர் முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன் இவருக்கு உபதேசம் செய்தருளினான். அக்கோயிலை எழுப்பிய மாமன்னன் இவர்.
* பழநி முருகன் சிவகிரி மேல் வீற்றிருப்பதைக்கண்டு வெகுண்டு அவருடன் போரிடச் சென்ற இடும்பாசுரன் பின் முருகனின் மகிமை உணர்ந்து அவருக்கே காவல் தெய்வமாக அதே பழநியில் திகழ்கிறான்.
* பழமுதிர்சோலையில் நாவல் பழ மரத்தின் மீது அமர்ந்து ‘சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என குமரக் கடவுள் கேட்டு ஔவையாரை திகைக்க வைத்தான் முருகன்.
* ஆதிசங்கரருக்கு அபிசார பிரயோகத்தால் காசநோய் தாக்கியது. அலைகடல் தாலாட்டும் கரையோரம் கோயில் கொண்டுள்ள செந்திலாண்டவனை அவர் சுப்ரமண்யபுஜங்கம் எனும் துதியால் துதித்து, பன்னீர் இலை விபூதியைத் தரித்த உடனேயே முருகப்பெருமானின் திருவருளால் அவர் நோய் நீங்கியது.
* திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகருக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் அருணகிரிக்காக முருகப்பெருமான் கம்பத்தில் தோன்றியருளினார். அவரே கம்பத்திளையனார் என்று இன்றும் போற்றப்படுகிறார்.
* ராமலிங்கவள்ளலாருக்கு அவர் வீட்டின் கண்ணாடியில் திருத்தணிகை முருகப்பெருமான் தரிசனமளித்து ஆட்கொண்டார். இதை ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள்’ எனும் திருவருட்பா பாடல் மூலம் அறியலாம்.
* திருத்தணி முருகன் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு திருத்தணியில் கற்கண்டை வாயில் போட்டு ‘நாதாதி குருகுஹோ’ எனும் கீர்த்தனையைப் பாட வைத்தவர்.
* பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை பேச்சு வராமல் இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகனை தரிசித்து ஒரு மண்டலம் விரதம் இருந்து, உலகமே புகழும் வண்ணம் கவி பாடும் திறமை பெற்றார்.
* மதுரை மாரியப்ப சுவாமிகள் ‘முருகப் பெருமானைப் பாடாத தம் நாவும் ஒரு நாவா?’ என நினைத்து தன் நாக்கை அறுத்தெறிந்தார். பின் முருகப்பெருமான் அருளால் அந்த நாக்கு வளர்ந்து, அவர் தமிழிசை பாடுவதில் வல்லவரானார்.
மேலும் செய்திகள்
செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள்புரிவாள் மகாலட்சுமி..!!
வசந்த காலத்தின் பிறப்பை குறிக்கும் யுகாதி பண்டிகை..!!
தீராத கஷ்டங்களை தீர்க்கும் கடவுள் வழிபாடு..!!
இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்
பித்ரு தோஷங்களை நீக்கும் தத்தாத்ரேயர் வழிபாடு..!!
தரித்திரத்தை விலக்கி குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்க செய்வாள் அன்னை சாமுண்டீஸ்வரி..!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி