ஐயப்பன் வழிபாட்டில் வேட்டைத் திருவிழா
2022-11-28@ 11:58:38

ஐயப்பன் தவயோகியாக ஞான குருவாக இருந்தாலும், அவர் அன்பர்களின் பாதுகாப்பாக வேட்டையையும் மேற்கொண்டுள்ளார். அதை நினைவூட்டும் வகையில் பேட்டைதுள்ளல் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முகத்தில் கரியையும், வண்ணப் பொடிகளையும் பூசிக்கொண்டு காய்கறிகளை தூளித்தொட்டிலில் கட்டி துள்ளி ஆடி வரும் பேட்டைத் துள்ளல், ஐயப்பன் தரிசன யாத்திரையில் முதன்மையான இடம் பெறுகிறது.
இலங்கையில் உள்ள ஐயப்பன் ஆலயங்களில் ஒன்று காரைத்தீவில் அமைந்துள்ள வியாவில் ஐயப்பன் ஆலயமாகும். இங்கு நடைபெறும் ஐயப்பன் விழாவில், வேட்டைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் மான், பன்றி, பறவைகள் ஆகிய மூன்றை வேட்டையாடுவதாக உருவகமாக கூறப்படுகிறது.
தத்துவ நோக்கில் மான்கள் ஆணவ மலத்தையும், பன்றிகள் கன்ம மலத்தையும், பறவைகள் மாய மலத்தையும் குறிப்பதாகக் கூறுகின்றனர். இவைகளை வேட்டையாடுவதன் மூலம் பெருமான், மும்மலங்களை நீக்கி உயிர்களுக்குப் பேரின்பம் அருளுகிறான் என்பதை உணர்த்துவதாகக்
கூறுகின்றனர்.
தொகுப்பு - அருள் ஜோதி
மேலும் செய்திகள்
பெருமாளை தமிழால் நடக்க வைத்தவர்
முருகனருள் பெற்ற அடியார்கள்
இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா! தமிழ் ஞானப் பழம் நீயப்பா!
பூரண ஜோதி ஒளிரும் பூசத் திருநாளில் ஓர் அற்புதம்!
லட்சுமி நரசிம்மரை வழிப்பட்டால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!