கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி வழிபட்டால் அழியா செல்வம் பெறலாம்..!!
2022-11-21@ 13:27:26

கார்த்திகை மாதம் என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது கார்த்திகை தீபம் தான். விளக்கு ஏற்றுவது என்பது இந்த மாதத்திற்கே உண்டான சிறப்பாகும். திருக்கார்த்திகை தீப திருநாள் மட்டும் அல்லாமல் இந்த மாதத்தில், கார்த்திகை மாத சோமவார விரதம் மிக மிக விசேஷம். சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது பல கோவில்களில் மிகவும் பிரசித்தியாக நடைபெறும்.
அண்ணாமலையார் தீபம், சபரிமலைக்கு மாலை போடுபவர்கள், முருகனுக்கு வேண்டி மாலை போடுபவர்கள் என்று இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு உரிய மாதமாகவே உள்ளது. திருக்கார்த்திகை நாளன்று மட்டுமின்றி கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வத சிறப்பான பலனை தரும். தினமும் காலையிலும், மாலை வேளையிலும் நிலை வாசலுக்கு வெளியில் 2 அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.
அகல் விளக்குகளை தரையில் வைக்கக் கூடாது. கோலமிட்டு வைத்தாலும் விளக்கை எப்போதும் தரையில் வைக்கக் கூடாது. சிறிய வாழை இலை, அரச இலை, ஆல இலை அல்லது ஒரு சிறிய தட்டின் மேல் தான் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
தீராப் பிணிகளை தீர்க்கும் வைத்தியநாதர்
இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்.
தெய்வங்கள் அருளும் ஆலயம்
வசந்தமான வாழ்வளிக்கும் வசந்த பஞ்சமி
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
கஜாரூடராக காட்சி தந்த கந்தவேலன்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!