குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா?
2019-09-18@ 10:51:41

செல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் ஒருவருக்கு செல்வம் குவிய ஆரமிக்கும். வாருங்கள் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் சேரும் என்று பார்ப்போம்.
* திருமகளான மகாலட்சுமிதான் செல்வத்துக்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியைத்தான் செய்கின்றார். ஆகையால் எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.
* வியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
* திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
* குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று.
* குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.
Tags:
குபேரன்மேலும் செய்திகள்
மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும்?
பங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு
இல்லந் தோறும் தெய்வீகம் கற்பூரத்தின் பயன்கள்
முயலகன் யார்?
எந்தெந்த ராசிக்கு ஏழரைச் சனி? என்னென்ன செய்ய வேண்டும்?
எங்கு யாரைப் புகழ வேண்டும்?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்