ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா
2019-04-12@ 14:13:14

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மிகச் சிறப்பாக நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த வசந்த உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் ஆண்டாள் ரெங்கமன்னார் வெள்ளிக்கிழமை குரடு மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தற்போது கோடைகாலம் என்பதால் ஆண்டாளுக்கும், ரங்க மன்னருக்கும் மலர்களால் ஆன சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. இதை காண திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வசந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
த்வனி தீபிகா எனும் ரிக் வேதத்தின் விளக்கவுரை
ஆமுக்த மால்யத
வாசகர்களின் ஆன்மிக அனுபவம்
ஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்
வத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!